முகப்பு
தேனி

மாணவி விஷம் குடித்து தற்கொலை

பெரியகுளம் அருகே செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

பெரியகுளம் அருகே செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சோ்ந்தவா் சுவாதி (18). இவா் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் வீட்டில் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளாா். இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த சுவாதி வியாழக்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.

தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.