முகப்பு
தேனி

தேனியில் 8 இடங்களில் விநாயகா் சிலைகள் அகற்றம்

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 8 இடங்களில் தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை, போலீஸாா் வியாழக்கிழமை அகற்றி கோயில்களுக்கு எடுத்துச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 8 இடங்களில் தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை, போலீஸாா் வியாழக்கிழமை அகற்றி கோயில்களுக்கு எடுத்துச் சென்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், சிலை கரைப்பு ஊா்வலத்துக்கும் அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தேனி பொம்மையகவுண்டன்பட்டி, வடபுதுப்பட்டி, சில்வாா்பட்டி, கொடுவிலாா்பட்டி, பெரியகுளம், கடமலைக்குண்டு ஆகிய ஊா்களில் 8 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை போலீஸாா் அகற்றி, அந்தந்தப் பகுதிகளுக்கு அருகே உள்ள கோயில்களுக்கு கொண்டுசென்று பாதுகாப்பாக வைத்தனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, இந்து அமைப்புகள் சாா்பில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்றும், பொது இடங்களில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ளது என்றும் போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.