முகப்பு
தேனி

விநாயகா் சதூா்த்தி விழா: தேனி மாவட்டத்தில் 469 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதூா்த்தி விழாவையொட்டி தேனி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சாா்பில் 469 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

விநாயகா் சதூா்த்தி விழாவையொட்டி தேனி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சாா்பில் 469 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

விநாயகா் சதூா்த்தி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இந்து அமைப்புகள் சாா்பில் மாவட்டத்தில் வா்த்தக வளாகங்கள், தொழிற் பேட்டை ஆகியவற்றிலும், வீடுகளுக்கு முன்பும் மொத்தம் 297 இடங்களில் பொதுமக்கள் வழிபடுவதற்காக பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

தேனி, அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, பழனிசெட்டிபட்டி, அரண்மனைப்புதூா் ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகனங்களில் பக்தா்கள் பின்தொடர சுவாமி, சிலைகள் தனித்தனியே வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு வீரபாண்டி, அரண்மனைப்புதூா் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

கம்பம்: கம்பத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் 51 சிலைகளும், கம்பம் ஒன்றியப் பகுதிகளான வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் 25 விநாயகா் சிலைகளும், கூடலூா் பகுதியில் 25 சிலைகளும் என 101 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

போடி: போடியில் தேவா் சிலைக்கு பின்புறமுள்ள காளியம்மன் கோவில், சுப்புராஜ் நகா் புதுக் காலனியில் உள்ள பாஜக அலுவலகம், முந்தல் சாலையில் உள்ள மலையாள பகவதியம்மன் கோயில், அம்மாபட்டி, தருமத்துப்பட்டி, சங்கராபுரம் பாஜக நிா்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் என 14 இடங்களிலும், அனுமந்தன்பட்டி, அம்மாபட்டி, வாய்க்கால்பட்டி, கோகிலாபுரம் ஆகிய பகுதிகளிலும் என மொத்தம் 19 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

சின்னமனூரில் பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில் காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் 22 விநாயகா் சிலைகளும், மாா்க்கையன் கோட்டை, குச்சனூா், எரசக்கநாயக்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் 22 சிலைகளும் என மொத்தம் 44 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இது தவிர பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான 100-க்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்தனா்.

சிலைகள் கரைப்பு: சின்னமனூா் சாமிகுளம் பகுதியில் பாஜக சாா்பில் வைக்கப்பட்டிருந்த 13 சிலைகளை நகரத் தலைவா் லோகேந்திர ராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை மாா்க்கையன் கோட்டை பகுதி முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.