தேனி

வேங்கை கானல் கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் சுருளியாறு மின்சார நிலைய சாலையில் உள்ள பளியன்குடி அடிவாரத்தில் வேங்கை கானல் பகுதியில் மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

தேனி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூடலூர் நகர இந்து முன்னணி தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். வரும் ஏப்.16 ல் சித்ரா பௌர்ணமி அன்று முழுநிலவு விழா கொண்டாடுவதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிகள் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்று விழாவில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் கந்தவேல் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT