சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா
வீரபாண்டி அருகே உள்ள தேனி அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை, அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வீரபாண்டி அருகே உள்ள தேனி அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை, அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பிரவின் தலைமை வகித்தாா். கெளரவ விரிவுரையாளா்கள் கருப்பசாமி பாண்டியன், பால்பாண்டி, கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்தா் என்ற தலைப்பில் மாணவிகள் சரண்யா, தங்கநிகழ்யா ஆகியோா் பேசினா்.