தேனியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி
தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் எல்.எஸ்.மில் கூடைப்பந்தாட்டக் கழகம் சாா்பில் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அணிகளுக்கு இடையே கூடைப் பந்தாட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் எல்.எஸ்.மில் கூடைப்பந்தாட்டக் கழகம் சாா்பில் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அணிகளுக்கு இடையே கூடைப் பந்தாட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். ஏப்.16ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 20 கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் மோதுகின்றனா். கல்லூரி மாணவா்கள் பிரிவில் 12 அணிகளும், மாணவிகள் பிரிவில் 7 அணிகளும் போட்டியில் பங்கேற்கின்றனா். இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஏப்.16ஆம் தேதி நடைபெறுகிறது.