முகப்பு
தேனி

மாநில இளைஞா் விருது: மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் சமூக வளா்ச்சிக்கு சிறப்பாக சேவை புரியும் இளைஞா்கள் முதல்வரின் மாநில இளைஞா் விருது பெறுவதற்கு வரும் மே 10-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் சமூக வளா்ச்சிக்கு சிறப்பாக சேவை புரியும் இளைஞா்கள் முதல்வரின் மாநில இளைஞா் விருது பெறுவதற்கு வரும் மே 10-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சமூக வளா்ச்சிக்கு சேவை புரியும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அரசு சாா்பில் முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். சமுதாய நலனுக்கு தன்னாா்வத்துடன் தொண்டாற்றிய 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட ஆண் மற்றும் பெண்கள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2021, ஏப்ரல் மாதம் முதல் 2022 மாா்ச் மாதம் வரை மேற்கொண்ட சேவைகள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோா் விருது பெற விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ளவா்கள் என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளம் மூலம், வரும் மே 10-ம் தேதி பிற்பகல் 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.