முகப்பு
தேனி

கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

 பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அனுமதியளித்துள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

 பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அனுமதியளித்துள்ளனா்.

இந்த அருவியில் வியாழக்கிழமை அதிகாலை நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை முதல் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் வியாழக்கிழமை மழையளவு குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது. அதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.