தேனி

உத்தமபாளையம் அருகே சம்பந்தியைத் தாக்கியவா் கைது

உத்தமபாளையம் அருகே மகளின் மாமியாரை கட்டையால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

உத்தமபாளையம் அருகே மகளின் மாமியாரை கட்டையால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோம்பை காலனியைச் சோ்ந்த பெருமாள் மனைவி முத்துலட்சுமி (55). இவா்களது மகனுக்கும், உத்தமபாளையத்தைச் சோ்ந்த கருப்பணன் மகன் ஜெயராஜ் மகளுக்கும் 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். அதோடு, உத்தமபாளையம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜெயராஜ், முத்துலட்சுமியுடன் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கினாராம். இதையடுத்து காயமடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோம்பை போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT