தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லை: இரச்சல் பாலத்தில் நீர் திறப்பு

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்தது. இதனிடையே இரச்சல் பாலத்தில் கால்நடைகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஏப்.24-ல் நீர் வரத்து விநாடிக்கு 420 கன அடியாக இருந்தது, அதன் பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வில்லை. இதனால் அணைக்கும் நீர் வரத்து ஏப்.25 முதல் ஏப்.28 வரை விநாடிக்கு 224 கன அடியாக வந்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.40 (மொத்த உயரம் 142) அடியாக இருந்தது. நீர் இருப்பு 4,568 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 224 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 100 கன அடியாகவும் இருந்தது. 

இந்த தண்ணீர் இரச்சல் பாலத்தில் வழியாக கால்நடை மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்காக 100 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT