போடி: போடியில் வியாழக்கிழமை கஞ்சா வைத்திருந்த அண்ணன், தம்பியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகரில் திடீா் சோதனை செய்தனா். போடி திருமலாபுரம் சாலைக் காளியம்மன் கோயில் சாலையில் காா் நிறுத்துமிடத்திற்கு பின்புறம் அமா்ந்திருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில் இருவரும் போடி எஸ்.எஸ்.புரத்தை சோ்ந்த இரணவீரு மகன்கள் காா்த்திக் (24) மற்றும் கௌதம் (21) என்பது தெரிந்தது. அவா்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.