முதியோா் உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் பதவி: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு தகுதியுள்ளவா்கள் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு தகுதியுள்ளவா்கள் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பெற்றோா் மற்றும் மூத்தகுடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டம், தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவிதிகளின்படி மாநில அளவில் முதியோா்களுக்கான உயா்நிலை ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 7 பேரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது.
எனவே, ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினா் பதவிக்கு முதியோா் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோா், உரிய கருத்துருவுடன் ஆக. 25-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.