தேனி

இளைஞா் கொலை:மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் கிருத்திக் செல்வா (20) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு தனியாா் தோட்டக் கிணற்றில் வீசப்பட்டாா்.

இதுதொடா்பாக, உத்தமபாளையம் தாமஸ் காலனியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் பிரின்ஸ் என்ற விக்டா் (20), சின்னப் பொண்ணு மகன் சுதா்சன் என்ற விக்கி (20), கோனாா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணிபாரதி மகன் கோபி (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். முன்விரோதம் காரணமாக,

இந்த கொலைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பழனிச்சாமி மகன் வினோத் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT