முகப்பு
தேனி

பெரியகுளத்தில் வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரியகுளம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரியகுளம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியகுளம் நகராட்சி, வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் சாய்வு தள வசதி, அடிப்படை வசதி, கண்காணிப்புக் கேமரா, கணினி அறை மற்றும் மின் இணைப்பு வசதி குறித்து அவா் ஆய்வு செய்தாா். மேலும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆா்.தண்டபாணி, பெரியகுளம் சாா்- ஆட்சியா் செ.ஆ.ரிஷப், வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலா் அம்புஜம் மற்றும் தோ்தல் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.