முகப்பு
தேனி

ஊரடங்கில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய காவலர்

தேனி மாவட்டம் கம்பத்தில் முழு ஊரடங்கன்று தெரு மேட்டுப்பகுதியைக் கடக்க மாற்றுத்திறனாளி முதியவருக்கு, காவலர் உதவி செய்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:


தேனி மாவட்டம் கம்பத்தில் முழு ஊரடங்கன்று தெரு மேட்டுப் பகுதியைக் கடக்க மாற்றுத்திறனாளி முதியவருக்கு, காவலர் உதவி செய்துள்ளார்.

தேனி மாவட்டம் தாத்தப்பன்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் புதுப்பாலம் அருகே மேடான பகுதியைக் கடக்க முடியாமல் திணறினார்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அந்த முதியவரை மேடான பகுதியில் சைக்கிளைத் தள்ளி, சம பகுதிக்குச் செல்ல உதவினார். இந்த நிகழ்வானது சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →