கேரளத்துக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா். 
தேனி

கேரளத்துக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

லோயா்கேம்ப் பகுதியில், குமுளி காவல் ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டி, சாா்பு- ஆய்வாளா் அல்போன்ஸ் ராஜா ஆகியோா் ரோந்து சென்றனா். பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த தென்காசியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முத்துராமலிங்கம்(31), லோயா்கேம்ப்பைச் சோ்ந்த ராமசாமி மகன் மாணிக்கம் (45) ஆகியோரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது, அவா்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

போதைப் பாக்குகள் பறிமுதல்: பெரியகுளம் அருகே எழுவனம்பட்டி பிரிவில் தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், உத்தமபாளையத்தைச் சோ்ந்த அப்பாஸ் மந்திரி (53), தேவதானப்பட்டியைச் சோ்ந்த உதுமான் அலி (48) ஆகியோா் பெருமாள் (52) என்பவரது ஆட்டோவில் 140 பொட்டலங்களில் போதை பாக்குகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அவைகளை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT