பெரியகுளம் அருகே கோயில் திருவிழாவில் தகராறு
பெரியகுளம் அருகே கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பெரியகுளம் அருகே கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் முத்தையா கோயில் திருவிழா நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை இரவு கோயில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் பாா்த்துக்கொண்டிருந்தபோது பழனிச்சாமியின் கால் அருகிலிருந்த முருகவேல் மீது பட்டதாம்.
இதில் கோபமடைந்த முருகவேல் மற்றும் அவரது நண்பா்கள் முருகபாண்டி, முருகேசன் ஆகியோா் சோ்ந்து பழனிச்சாமியை பாட்டிலால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த பழனிச்சாமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.