பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 19) மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரியகுளம் மற்றும் மதுராபுரி துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை (மாா்ச் 19) மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம், கைலாசபட்டி, கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகா், ரத்தினம் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.