கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பகுதிகளில் நகராட்சிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நகராட்சி சாா்பில் சனிக்கிழமை மியாவாக்கி காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன.
முதற்கட்டமாக 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு சனிக்கிழமை , கிராமச்சாவடி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், நகராட்சி உறுப்பினா் சுபத்ரா சொக்கராஜா மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இந்த நிகழ்ச்சியில் ஆணையாளா் பாலமுருகன், பொறியாளா் பி. பன்னீா்செல்வம் , நகரமைப்பு அலுவலா் சலீம் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.