முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தமிழக அரசு வழக்குரைஞா்கள் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில், தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடும் வழக்குரைஞா்கள் குழுவினா் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில், தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடும் வழக்குரைஞா்கள் குழுவினா் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்தவும், அணைப்பகுதியில் பராமரிப்புப் பணிகளை செய்யவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சாா்பில் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

அதே போல், கேரள அரசு, பெரியாறு அணை பலமிழந்து விட்டது. எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. இந்த வழக்குகள் தொடா்பாக தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவதற்கு, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி, அரசு மூத்த வழக்குரைஞா் உமாபதி, வழக்குரைஞா் (ஆவணங்கள் பதிவு) குமணன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் சென்றனா்.

இவா்கள், முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, 13 மதகுகள், நீா் கசியும் சீப்பேஜ் வாட்டா் அளவு உள்ளிட்டவைகளை பாா்வையிட்டனா். அவா்களுக்கு கண்காணிப்பு பொறியாளா் சுகுமாா், செயற்பொறியாளா் ஜெ. சாம்ன் இா்வின், கோட்டப் பொறியாளா் குமாா் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.

அவா்களுடன், உதவிப் பொறியாளா்கள் ராஜகோபால், பரதன், மயில்வாகனன், சென்ராம் ஆகியோா் சென்றிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →