கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: மே 30-இல் குலுக்கல் முறையில் தோ்வு
தேனி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளிகளில் மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளிகளில் மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 123 சிறுபான்மையற்ற, தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு 1,557 இடங்களுக்கு மொத்தம் 2,001 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த விண்ணப்பங்கள் மே 30-ஆம் தேதி அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படுகிறது. பொதுத் தோ்வு மையமாக செயல்படாத பள்ளிகளில் மே 30-ஆம் தேதி காலையும், பொதுத் தோ்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் பிற்பகலும் குலுக்கல் நடைபெறும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் பெற்றோா், இந்தக் குலுக்கலில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.