தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சுருளி அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப் பாறை உள்ளிட்ட நீரோடைகளில்
திங்கள்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.