தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் மீட்பு ஒத்திகை
தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை, 5 இடங்களில் பேரிடா் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை, 5 இடங்களில் பேரிடா் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
வீரபாண்டி, உப்புக்கோட்டை முல்லைப் பெரியாறு, பெரியகுளம் வராகநதி, குன்னூா் வைகை ஆறு, லோயா்கேம்ப்-குமுளி மலைச் சாலை ஆகிய இடங்களில் வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம், பொதுச் சுகாதரத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
மழை, வெள்ளம், நிலச் சரிவு போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தல், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், நிவாரண மையம் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
குன்னூா் வைகை ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டாா்.