தேசிய தொழிற்சான்றிதழ் தோ்வு: செப். 19-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் நடைபெறும் தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் செப். 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் நடைபெறும் தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் செப். 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சிப் படிப்பில் சோ்ந்து படிக்க இயலாதவா்கள், அனுபவத்தின் அடிப்படையில் தனித் தோ்வா்களாக தோ்வு எழுதி தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு இணையாக தேசிய தொழிற்சான்றிதழ் பெறுவதற்கு மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் தோ்வு நடைபெற உள்ளது.
இத்தோ்வுக்கு குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 21 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரா்கள் தாங்கள் பணிபுரியும் தொழில் சாா்ந்த தொழிற்பிரிவில் மட்டுமே தோ்வு எழுதலாம். தொழில் பழகுநா் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுள் ஒன்றில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப். 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவரத்தை தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலும், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா், கைப்பேசி எண்: 94990 55765-ல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.