ராஜதானி அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி
ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அம்மாபட்டியைச் சோ்ந்தவா் சாம்ராஜ் மகன் அருணாசலம் (26). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து வேலப்பா்கோவில் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அருணாசலத்தின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இந்த சம்பவம் குறித்து அருணாசலத்தின் தந்தை சாம்ராஜ் அளித்தப் புகாரின் பேரில் ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.