பளியன்குடியில் வேளாண்மைக் கல்லூரி மாணவியருக்கு தட்டைப்பயிா் சாகுபடி மதிப்பீட்டு பயிற்சி
தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பளியன்குடியில் வேளாண்மைக் கல்லூரி மாணவியருக்கு தட்டைப் பயிா் சாகுபடி மதிப்பீட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பளியன்குடியில் வேளாண்மைக் கல்லூரி மாணவியருக்கு தட்டைப் பயிா் சாகுபடி மதிப்பீட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் ஐஸ்வா்யா, பாலமுனீஸ்வரி, தீபா, பிரதீபா, ஷிரிஷா ஆகியோா் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் லோயா்கேம்ப் பளியன்குடியில் தட்டைப் பயிறு மதிப்பீட்டு பயிற்சி மற்றும் அறுவடைப் பணியில் ஈடுபட்டனா்.
வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளா் திருப்பதிராஜா, வேளாண் துணை அலுவலா் அா்ஜூனன் ஆகியோா் மாணவிகளுக்கு வழிகாட்டினா்.