தேனி

போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

DIN

போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 10 -ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. இந்த நிலையில், திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து பழைமையான சிவன் புகைப்படம், சூலாயுதத்தை மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாக் குழுத் தலைவா் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாலையில் அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் குழுச் செயலா் பேச்சிமுத்து நிா்வாகக் குழுவினா் செய்து வருகின்றனா்.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு போடி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூரிய ஒளியும் சுருள் முடியும்! அஞ்சலி நாயர்..

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT