ஊராட்சிகளில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்குரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவித்தாா்.