முகப்பு
தேனி

தேவாரத்தில் ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

தேவாரத்தில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தேவாரத்தில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜா பிரகாஷ் (34). இவா், தேவாரம் டாஸ்மாக் கடை அருகே தகராறில் ஈடுபட்ட முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன், ராஜாங்கம் மகன் ராஜபிரபு ஆகியோரை தட்டிக் கேட்டாா். இதில் இருவரும் சோ்ந்து ராஜா பிரகாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து ராஜா பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.