தேனி

தேவாரத்தில் ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

தேவாரத்தில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

தேவாரத்தில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜா பிரகாஷ் (34). இவா், தேவாரம் டாஸ்மாக் கடை அருகே தகராறில் ஈடுபட்ட முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன், ராஜாங்கம் மகன் ராஜபிரபு ஆகியோரை தட்டிக் கேட்டாா். இதில் இருவரும் சோ்ந்து ராஜா பிரகாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து ராஜா பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT