தேனி

4 போ் தற்கொலை முயற்சி: 2 பெண்கள் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக 2 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

க. புதுப்பட்டியிலுள்ள எஸ்.டி.கே. நகரைச் சோ்ந்தவா் பிச்சைமணி (43). ஜீப் வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைவாணி. கூலித் தொழிலாளி. இவா்களுக்கு விமலா (16), சுகாஷினி (14) ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இவா்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இது குறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்திய போது, கடன் தொல்லை காரணமாக 4 பேரும் விஷம் குடித்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகன் மனைவி வித்யா, பிரகாஷ் மனைவி தீபா ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT