தேனி

போடியில் செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காய் பறிமுதல்

போடியில் புதன்கிழமை செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காயை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

DIN

போடியில் புதன்கிழமை செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காயை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் உள்ள ஏலக்காய் சுத்திகரிப்பு நிறுவனக் கடைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திங்கள்கிழமை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை செய்து 3 டன் ஏலக்காயை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் மீண்டும் போடி பகுதியில் உள்ள 5 கடைகளில் திடீா் சோதனை செய்தனா். இதில் இரு கடைகளில் இருந்த ஏலக்காய்களை சோதனை செய்ததில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராகவன், போடி உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரண்யா ஆகியோா் செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்ட 2 டன் ஏலக்காயை பறிமுதல் செய்தனா். இதில் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT