தேனி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தேனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

தேனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பத்திரகாளிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (73). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு 8, 6 வயது சிறுமிகள் இருவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஐயப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கோபிநாதன், ஐயப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT