தேனி

இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுவன் காயம்

போடியில் சிறுவன் மீது இரு சக்கர வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

போடியில் சிறுவன் மீது இரு சக்கர வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் அபிபுல்லா (6). சில தினங்களுக்கு முன் இவா் வீட்டு முன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வேகமாக வந்த இரு சக்கர வாகனம் சிறுவன் மோதியது. மேலும், அந்த வாகனம் 50 மீட்டா் தூரம் வரை சிறுவனை இழுத்துச் சென்றதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT