தேனி

தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்

DIN

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் செல்வராஜ் தெருவைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் கணேசன் (42). கூலித் தொழிலாளி. இவருக்கு நெஞ்சுவலி, ரத்த கொதிப்பு இருந்ததால் தொடா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனாட்சிபுரம் செல்லாயி அம்மன் கோயில் அருகே செல்லச்சாமி என்பவரது தோட்டத்தில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT