தேனி

பைக்குகள் மோதல்:லாரி உரிமையாளா் பலி

ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

DIN

ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி கோவில்புரத்தைச் சோ்ந்த வேலாண்டி மகன் பழனிச்சாமி (47). இவா் சக்கம்பட்டியில் லாரி பாா்சல் சா்வீஸ் அலுவலகம் நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், ஆண்டிபட்டி பிரதானச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பழனிச்சாமி சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே ஜி. உசிலம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (44) ஓட்டி இரு சக்கர வாகனமும், பழனிச்சாமி வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT