தேனி

கஞ்சா வைத்திருந்த 2 இளைஞா்கள் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Din

பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தென்கரை-வடுகபட்டி சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சூா்யபிரகாஷ் (24), மனோகரன் மகன் சசிபிரபு (23) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இருவரும் வைத்திருந்த பைகளில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஜெர்மனியில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்களுக்கு சிக்கல்! நாடு கடத்தப்படலாம்?

கோவை மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேலாளரை நீக்கிய நடிகர் விஷால்!

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 13 லட்சம் போ் பயன்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

விஜயகாந்த் நினைவு நாள்! எடப்பாடி பழனிசாமி நேரில் மரியாதை!

SCROLL FOR NEXT