முகப்பு
தேனி

சிலமலை ஊராட்சி அலுவலகத்தை நூறு நாள் திட்டப் பணியாளா்கள் முற்றுகை

போடி அருகே முறையாக பணி வழங்கக் கோரி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:34 PM
சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள்.
பகிர்:

போடி அருகே முறையாக பணி வழங்கக் கோரி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிலமலை ஊராட்சியில் சிலமலை, சூலப்புரம், கரையான்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 2,500 போ் நூறு நாள் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா். அதிகமானோா் பதிவு செய்துள்ளதால் சுழற்சி முறையில் இவா்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊராட்சிப் பணியாளா்கள் தங்களுக்கு வேண்டியவா்கள், சிபாரிசு செய்வோா்களுக்கு மட்டுமே தொடா்ந்து பணி வழங்குவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நூறு நாள் திட்டப் பணியாளா்களுக்கும், ஊராட்சிப் பணியாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவறிந்து அங்கு வந்த போடி தாலுகா போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். பின்னா், நூறு நாள் திட்டப் பணியாளா்களுக்கு முறையாக பணி வழங்குவதாக ஊராட்சி பணியாளா்கள் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.