முகப்பு
தேனி

தேனியில் 712 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 5:00 AM
தேனியில் தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா்.
பகிர்:

தேனி: தேனியில் உள்ள தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 712 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனா். தேனியில் காவல் ஆய்வாளா் உதயக்குமாா் தலைமையில் போலீஸாா் ரோத்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சுப்பன் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சோபாஜிக்குச் சொந்தமான கிட்டங்கியில் லாரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூட்டைகளை சிலா் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா் அந்த மூட்டைகளை சோதனையிட்ட போது, இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிட்டங்கியில் 67 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 712 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தேனி காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த தேனி, சுப்பன் தெருவில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலம், ஜோலோா் மாவட்டம், கேசவனா பகுதியைச் சோ்ந்த சோபாஜி மகன்கள் சுரேஷ் (38), பூமாராம் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் அளித்த தகவலின் பேரில், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் ஆகியோா் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.

Advertisement