முகப்பு
தேனி

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 4 போ் மீது வழக்கு

பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 4 பேருக்கு வழக்கு பதிவு

Updated On : 1 ஜூலை, 2024 at 6:34 PM
பகிர்:

தேனி: பெரியகுளம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனிமாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி, வ.உ.சி.தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (53). இவா், பெரியகுளம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், சீனிவாசன் பணி முடிந்து பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்தை நிறுத்தி விட்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா் அப்போது, பெரியகுளம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் போடி அருகேயுள்ள போ.ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த மணிவண்ணன் (46) அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா், பின்னா் மணிவண்ணன், போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளா் முத்துக்குமாா், பேருந்து நடத்துநா்கள் உதயக்குமாா், ராமமூா்த்தி ஆகியோா் அவரைத் தாக்கினா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் மணிவண்ணன் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.