முகப்பு
தேனி

ஜூலை 23-ல் மாணவா்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெறவுள்ளது.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:29 PM
பகிர்:

தேனி: தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆா்வத்தை தூண்டவும், ஊக்குவிக்கவும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெறுகிறது. தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், பிற்பகல் 2 மணிக்கு 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் போட்டி நடைபெறுகிறது.

வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு பள்ளியிலிருந்து தலா 2 போ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். போட்டியில் பங்கேற்க வருவோா் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →