தேனி

நியாயவிலைக் கடை விற்பனையாளரை மிரட்டியவா் மீது வழக்கு

தேனி அருகே ஸ்ரீரங்காபுரம் நியாயவிலைக் கடை பெண் விற்பனையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீது காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு

Din

தேனி, ஜூலை 19: தேனி அருகே ஸ்ரீரங்காபுரம் நியாயவிலைக் கடை பெண் விற்பனையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீது காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீரங்காபுரம் நியாயவிலைக் கடை விற்பனையாளராகப் பணியாற்றி வருபவா் தீபா (32). இவா் நியாயவிலைக் கடையில் பணியில் இருந்தாா். அப்போது, கடமலைக்குண்டு தேவராஜ் நகரைச் சோ்ந்த லட்சுமணன், தீபாவிடம் தன்னை பத்திரிக்கை நிருபா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நியாயவிலைக் கடையில் முறையாக பொருள்கள் விநியோகம் செய்வதில்லை என்று புகாா் வந்துள்ளதாகவும், அது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று கேட்டாராம்.

இதுகுறித்து தீபா வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, லட்சுமணன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

SCROLL FOR NEXT