போடியில் சாரல் மழை
போடியில் மாலையில் சாரல் மழை: குளிர்ந்த சூழல்
போடி: போடி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் மேகங்கள் சூழ்ந்தும் காணப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் வெயில் அடித்த நிலையில் மாலையில் திடீரென சாரல் மழை பெய்தது. விட்டு விட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த சாரல் மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.