இன்று முதல் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற இ.சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்
உத்தமபாளையம்: தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற இ.சேவை மையங்களிலே விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியானது.
அதில், தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணபிக்க வேண்டும்.
ஆனால், தற்போது, விண்ணப்பம் செய்ய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் வரத்தேவையில்லை. மாறாக, தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள அரசு அனுமதி பெற்ற இ.சேவை மையங்களில் ரூ.60 கொடுத்து உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Advertisement
அதன் பின், 30 நாள்களுக்கு பின் தங்கள் பகுதியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்கு சென்று வாகனத்தை ஓட்டிக் காண்பித்து லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலமாக, தனியாா் பயிற்சிப் பள்ளிகள், இடைத்தரகா்கள் மற்றும் தனியாா் இளையதள மையங்கள் மூலமாக தேவையில்லாத செலவுகள் மற்றும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதை தவிா்க்கவே இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.