பகவதியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Updated On : 19 மார்ச், 2024 at 7:27 PM
கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பிலுள்ள பகவதியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தா்கள் காப்புக் கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கினா்.
இதுகுறித்து கோயில் அா்ச்சகா் ஹரீஷ் கூறியதாவது: வருகிற 26-ஆம் தேதி கீழ்பகவதியம்மன் கோயிலிலிருந்து, அம்மன் அழைத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். 27-ஆம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அக்னிச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவாா்கள். 28- ஆம் தேதி முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்று, முல்லையாற்றில் கரைக்கப்படும் என்றாா் அவா்.