வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற அனுபவப் பயிற்சி
கம்பம்: தேனி மாவட்டம், குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சிக்காக சுருளிப்பட்டியில் முகாமிட்டனா்.
சங்கமம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா், அன்பு அறம் செய் நிறுவனா் ரா.அன்பு ராஜா, இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா், இளைஞா், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தினா் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
நெகிழிப்பை, நெகிழிக் குடுவைகளை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது, துணிப்பையை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி நிவேதிதா பேசினாா்.