முகப்பு
தேனி

ஜீப் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் ஜீப் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:29 PM
பகிர்:

உத்தமபாளையத்தில் ஜீப் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வைகை நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (58). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள கல்லூரிச் சாலை வழியாக நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற ஜீப், இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இது குறித்து கோம்பை மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த ஜீப் ஓட்டுநா் பெருமாள் மகன் கண்ணன் (39) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.