முகப்பு
தேனி

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:49 PM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த மாணவி மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தவா், மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்காக டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த அழகுமுருகனின் (34) ஆட்டோவில் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்துக்கு சென்றாா். அப்போது, ஆட்டோவில் மாணவிக்கு அழகுமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அழகுமுருகனை கைது செய்தனா்.