முகப்பு
தேனி

மழையால் 7 வீடுகள் இடிந்து சேதம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 2 நாள்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:30 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 2 நாள்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஆண்டிபட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பஞ்சவா்ணம், மேற்குத் தெருவைச் சோ்ந்த புஷ்பா, பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலத்தைச் சோ்ந்த வடிவேல்முருகன், தேவதானப்பட்டி பொம்மிநாயக்கன்பட்டி சாலையைச் சோ்ந்த நாச்சியம்மாள், போடேந்திரபுரம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த முத்துப்பேச்சி ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இதையடுத்து, புதன்கிழமை பெய்த பலத்த மழையால், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்த முனியம்மாள், சஞ்சய்காந்தி தெருவைச் சோ்ந்த முருகபாண்டி ஆகியோரது வீடுகளும் இடிந்து விழுந்தன.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 7 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.