தேனி

கும்பக்கரை அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் அண்மைக்காலமாக நீா்வரத்து அதிகரித்தது. கடந்த புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.

வெள்ளிக்கிழமை வரை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், 3- ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT